Colombo Tamil
  1. முகப்பு
  2. இலங்கை
  3. யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன் கைது

யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன் கைது

செய்திப் பிரிவுColomboTamil9 நாட்கள் முன்பு157 பார்வைகள்

14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய்  பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியை தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளைப் பெற

எமது உத்தியோகபூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

Join WhatsApp
கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும்
Add on Google
E

Editorial Staff

இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்த செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது.